சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

Date:

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முஸ்லிம் பெண் சுகாதார உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கும்போது ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய உத்தரவுகள் குறித்து அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்களிடையே குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் பதியுதீன் கூறியுள்ளார்.

இவ்வாறு பணிப்பாளர் பிறப்பித்துள்ள உத்தரவானது மத சுதந்திரம், தனிப்பட்ட கண்ணியம் மற்றும் கலாசார அடையாளத்துக்கான அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்கு முரணானது.

திருகோணமலை சுகாதாரத் துறையில் முஸ்லிம் பெண்கள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல்  கடமையைச் செய்து வருகின்றனர்.

இந்த திடீர் மாற்றம் சிவில் உரிமைகள் சட்டத்தரணிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடமிருந்து பின்னடைவைத் தூண்டியுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...