அருகம்பேயை சூழ உள்ள மக்களின் சமாதானத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பங்கம் இல்லா வகையில் உல்லாசப் பயணிகளின் வருகை இடம்பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வாஸித் எம்பி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் நேற்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திஸானாயக்க அவர்களை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதியினால் அருகம்பே பிரதேசத்திற்கு வருகைதரக் கூடிய சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், இஸ்ரேல்  சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும் வினவப்பட்ட கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதிலளித்திருந்தார்.

அவர் பதிலளிக்கையில், இஸ்ரேல்  உல்லாச பயனிகளின் வணக்கஸ்தலமான சபாத் பற்றியும், அவர்கள் சுற்றுலா பயணிகளிலாக வந்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பதையும் மற்றும் அவர்களுக்கு மக்களினுடைய எதிர்ப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் சமாதானத்திற்கு, கலாச்சாரத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் உல்லாச பயணிகளுடைய வருகை இடம்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமின்றி, பொத்துவிலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களை நேரில் சந்திப்பதற்கான திகதியொன்றினையும் பாராளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளதுடன் மிக விரைவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டினை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...