சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்” என்று இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தாமதமாக சமர்ப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மார்ச் மாதம் 31 ஆம் திகதி லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக தெரிவித்திருந்தது.

இதன்பிரகாரம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு இறுதியாக ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த காலப்பகுதிக்குள் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள்குறித்த தரவுகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பித்து, விதிக்கப்படக்கூடிய அபராதத்தினை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...