தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாகக் கருதியவர்கள் மூத்த இமாம்கள்!

Date:

தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டு தனது கருத்துக்கள் கொள்கைகள் சார்ந்த பிழைகளிலிருந்து தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாக கருதியவர்கள் எமது முன்னைய மூத்த இமாம்கள்.
அவர்களை முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கின்றவர்கள் வழிகாட்டுகின்றவர்கள் என்று மார் தட்டிக் கொள்கின்றவர்கள் விடாப்பிடியாக இருப்பவர்கள்
ஏன்? அவர்களுடைய இந்த நிலைப்பாடுகளில் இருந்து மாத்திரம் பாடம் படிப்பினை பெறுவதில்லை? நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை? என்பது சர்ச்சைக்குரிய விடயமே
எனும் அருமையான நூல் அறிவுக் கடலாய் போற்றப்படும் இமாம் அல் கஸ்ஸாலி

அவர்கள் தன்னுடைய நிலைப்பாடுகளை எப்படி மாற்றிக் கொண்டார்கள்? ஏன் மாற்றிக் கொண்டார்கள்? என்ற விளக்கத்தை முன்வைக்கிறது.

இருளை கீறிக் கிழித்துக்கொண்டு ஒளிப்பிழம்பாய் வரும் கதிரவன் போல

எப்படி தன்னுடைய தெளிவற்ற குழப்பங்களும் சந்தேகங்களும் நிறைந்த சிந்தனைகளுக்கு வழிகாட்டி அவற்றுக்குத் தடையாய் திரையாய் அமைந்த அனைத்தையும் சத்தியம் ஒளியூட்டியது என்பதனை விளக்குவதை இந்நூலில் காணலாம்.

அவ்வாறே அகீதா துறையில் அதிகம் பேசிய இமாம் அல் அஷ்அரி…எப்படி

தன்னுடைய நிலைப்பாடுகளை அலசி ஆராய்கின்றார் என்பதனைய இபானா எனும் நூல் வழியாக காணலாம்…

தன்னைச் சூழ நான்கு சுவர்களில் எழுப்பிக் கொண்டு அதற்குள்ளால் மாத்திரம் உலகை பார்ப்பதனை விட தனக்கு வெளியில் இருக்கும் புறச்சூழலையும் உற்று நோக்கி அவதானிக்கின்ற பொழுது தான் தன்னுடைய கருத்துக்கள் சிந்தனைகள் விரிவடையும். விசாலமடையும். என்பதனை தான் இவர்கள் எமக்கு சொல்லித் தருகின்றார்கள்

ஏன் அவ்வளவு இமாம் ஷாஃபி அவர்கள் கூட தன்னுடைய நிலைப்பாடுகளை கால சூழமைவுக்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொண்டார்கள் என்பதனை அவரை ஆழமாக வாசிக்கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள்
ஆனால் எமக்கு முன்னால் இருக்கின்ற பாரிய துரதிஷ்டம் என்னவென்றால் தாம் வகுத்த கொள்கைகளையே காலப்போக்கில் மாற்றிக் கொண்டு புதிய நிலைப்பாடுகளை உருவாக்கி தம்மை விடுவித்துக் கொண்டவர்களை உச்சியில் வைத்துக்கொண்டு கொண்டாடுகின்றவர்கள் அவர்களுடைய இத்தகைய நெகிழ்வுத் தன்மைகளை விசாலமான பார்வையை பெறந்து பட்ட நோக்கி ஏன் அமல்படுத்துவது இல்லை என்பதுதான் முரணாக உள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...