தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

Date:

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்றையதினம் (05) பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 177 வாக்குகளும், எதிராக எவ்வித வாக்கும் அளிக்கப்படவில்லை.

வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்திருக்கும் வகையில் ஒரு வாக்கும் கிடைக்கப் பெற்றது.அதற்கமைய குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்திருந்தார்.

தேசியப் பட்டியல் எம்.பியான நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக (அம்பாந்தோட்டை), சானக மடுகொட (காலி) ஆகிய 3 எம்.பிக்களே இம்முறை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 4.10 மணிக்கு ஆரம்பமானது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கும் வகையில் மஞ்சள் நிற பொத்தனை அழுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...