மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனி (02) ஞாயிறு (03) திகதிகளில் நடைபெற்றது.

‘உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்’ என்ற தொனிப் பொருளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது

செயலமர்வில் வளவாளர்களாக ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகமும், முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமான எம். எம் .முஹம்மத், கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் பிரதம செயலாளர் யூ.எல்.அஸீஸ், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் முஹம்மத் அஜ்வதீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரிஎம். ராபி ஆகியோர் பயனுள்ள கருத்துரைகளைத் தெரிவித்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.எம்.முஷர்ரப், ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

அத்துடன், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஆகியோரும் இதில் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் நன்றி உரை நிகழ்த்தியதையடுத்து, இந்த செயலமர்வு இனிதே நிறைவுற்றது.

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...