மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனி (02) ஞாயிறு (03) திகதிகளில் நடைபெற்றது.

‘உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்’ என்ற தொனிப் பொருளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது

செயலமர்வில் வளவாளர்களாக ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகமும், முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமான எம். எம் .முஹம்மத், கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் பிரதம செயலாளர் யூ.எல்.அஸீஸ், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் முஹம்மத் அஜ்வதீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரிஎம். ராபி ஆகியோர் பயனுள்ள கருத்துரைகளைத் தெரிவித்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எம்.எம்.முஷர்ரப், ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

அத்துடன், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஆகியோரும் இதில் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் நன்றி உரை நிகழ்த்தியதையடுத்து, இந்த செயலமர்வு இனிதே நிறைவுற்றது.

 

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...