மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

Date:

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று (06) காலை 11.45 மணியளவில் வீடமைக்க தளம் வெட்டி கொண்டிருந்த வேளையில் திடீரென மண் மேடு சரிந்ததால் 6 பேர் புதையுண்டனர்.

சம்பவத்தையடுத்து மஸ்கெலியா பிரதேச சபை பணியாளர்களுடன் பிரதேசவாசிகள் புதையுண்ட 6 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சரிந்த மண் மேடு அகற்றப்பட்டு 6 பேரும் அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் யதுர்ஷன் (28), யோகேஸ்வரன் (45), ராஜேஸ்வரன் (38), விஜயலிங்கம் (45), விஜயகுமார் (43), ஆறுமுகம் (45) ஆகிய 6 பேரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர்.

மஸ்கெலியா பொலிஸார், ராணி தோட்ட தொழிலாளர்கள் இணைந்து இவர்களது உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபை முதல்வர், சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...