கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

Date:

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கம்மல்துறை அல்பலாஹ் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன்போது கம்பாஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலா பூஷணம் எம்.ஏ.ஏம்.நிலாம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஜே. எம். தாஜுதீன் நியமிக்கப்பட்டார்.

செயலாளராக பியாஸ் முகம்மத் மற்றும் பொருளாளராக எம். எம். பௌஸான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம். ஜே. எம். தாஜுதீன்,எம் எப். புஷ்ரா,அஹ்சன் ஆரிப், நாச்சியாதீவு பர்வீன், ஸிராஜ் எம் சாஜகான், முஷாரப் மொஹிதீன், எம். எம். இஸ்மதுல் ரஹ்மான் மற்றும் எஸ்.ஏ. எம். பவாஸ். ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்

இன்றையதினம் (27) நாட்டின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்...

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த...

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள்...