ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை.

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்புக்காவலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் தானும் இணைவதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, இலங்கையைக் காப்பாற்ற நின்ற தலைவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தகுதியற்றது.

உண்மையாக இருந்தாலும், அவை ஐரோப்பாவின் எந்தவொரு குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கும் சமமாகாது என்றும் கூறினார்.

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த” அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...