இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

Date:

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.

மருத்துவமனை தாக்கப்பட்டபோது மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் இருந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அவர்களும் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம், அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது.

அவரை “பயங்கரவாதி” என்றும், அவர் “பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டது.

இஸ்ரேலுக்கும், அல் ஜசீராவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலை அல் ஜசீரா கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “இரத்தக்களரி குற்றம்” என்று கூறியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...