அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

Date:

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்  இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அவரை கைது செய்ய நுகேகொடை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

முன்னதாக எங்கள் மக்கள் சக்தி (அபே ஜனபலவேகய) கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்துரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...