இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

Date:

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பினை அண்மையில் வழங்கியிருந்தன.

இந்த வாய்ப்பைப் பெற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இத்தரப்பினர், இலங்கைக்குத் திரும்பியதும் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடனான சந்திப்பொன்றை வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள தாஜ் கொழும்பிலுள்ள சமுத்ரா ஹோட்டலில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல் தலைவர்கள், தங்கள் இந்தியப் பயணத்தின் போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

இங்கு, இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வித் துறையில் காணப்படும் நவீனத்துவம், கலாச்சார உறவுகள் மற்றும் ஜனநாயக மரபுகள் உள்ளிட்ட பல துறைகளில் கருத்துக்கள் முன்வைத்து தாம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 10 people and dais

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...