அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம்!

Date:

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு ஆய்வு நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால,

“செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக வீதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் உள்ளது.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...