எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Date:

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார்.

பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிறுவுவதற்கும் மீளாய்வு செய்வதற்குமாக 2012 ஆம் ஆண்டு எல்லை மீள் நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் ஒருசில விதந்துரைகள் மாத்திரம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பின்னர் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு குறித்த குழுவின் விதந்துரைகள் தொடர்பாக இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த குழுவின் அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அந்தந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சமர்ப்பித்து குறித்த குழுக்களின் விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவ்விதந்துரைகளை மீளாய்வு செய்து புதிய விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்குமென புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீ காரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...