கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

Date:

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர் ஹாஷிமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோபா குழுவின் தலைவர் பதவியில் இருந்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பதவி விலகல் செய்துள்ளார்.நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கோபா குழுவின் தலைவராக  அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டதுடன், சுமார் ஏழு மாதங்களாக இந்தப் பதவியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள கபீர் ஹாசிமின் நியமனம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...