செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

Date:

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம் (IUMS), உலகெங்கிலும் உள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசா மக்கள் எதிர்கொள்ளும் “கொலைகள், இடம்பெயர்வு மற்றும் பட்டினி” பற்றியும் இந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் உலகில் பலரிடமிருந்து உதவிகள் இருந்தபோதிலும், சர்வதேச அளவிலான மூடி மறைப்புகள் மற்றும் சில ஆட்சிகளின் உடந்தைகள் காஸாவின் துன்பத்தைத் தணிக்கும் முயற்சிகளைத் தடுத்துள்ளதாக இத்திஹாதுல் ஆலமுல் உலமாஉல் முஸ்லிமீன் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் , பிரார்த்தனை மூலம் படைத்தவனை நோக்கித் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு, காசா மக்களின் வெற்றிக்காகவும், அவர்களின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவதற்காகவும் தங்கள் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கேட்டுக்கொள்கிறது.

இந்த நோக்கத்திற்காக ஒன்றுகூடும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வேண்டுகோள்களை அல்லாஹ் நிராகரிக்க மாட்டான் என்றும் கத்தாரைத் தளமாகக் கொண்ட IUMS நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் கடிதத்தில் பொதுச் செயலாளர் டாக்டர் அலி முகமது முகமது அல்-சல்லாபி மற்றும் தலைவர் பேராசிரியர் டாக்டர் அலி மொஹியுதீன் அல்-கர்தாகி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...

டிஜிட்டல் அடையாள அட்டை புரிந்துணர்வு ஒப்பந்தம்:அநுர – ஹரிணி உள்ளிட்டஅமைச்சரவைக்கு உயர் நீதிமன்றம் விசேட அறிக்கை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை...

விளக்கமறியலில் இருந்த தேசபந்து பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை...