சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

Date:

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர் கல்வி நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆயிஷா கலாபீட முன்றலில் அண்மையில் நடைபெற்றது.

‘அருள் மிகு குடும்பம் இன்பம் நிறைந்த இல்லம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி 07-11 ஆம் திகதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இன்று அதனுடைய இறுதிநாளாகும்.

சமூகத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் 8 பிரதான தலைப்புகளை கண்காட்சி உள்ளடக்கியுள்ளது. ஆயிஷா கல்லூரியின் வரலாறு மற்றும் தாய்மை விருத்தி, இஸ்லாமிய குடும்பத்தின் நோக் கங்கள், திருமண வாழ்க்கை, பெற்றோரியம், குழந்தைகளின் வளர்ச்சியும் விருத்தியும், நவீன குடும்ப சவால்கள், இஸ்லாமிய வீடு, இஸ்லாமிய இல்லம் என்பவையே அவையாகும்.

குடும்பம் தொடர்பான பல்வேறு விடயங்களை காட்சிப்படுத்தப்படுத்தக்கூடிய இக்கண்காட்சி மிகவும் வரவேற்பு பெற்ற கண்காட்சியாக அமைந்துள்ளது.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட கள்எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முன்னாள் அதிபருமான மௌலவியா திருமதி ஜலீலா ஷஃபீக் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள்…

 

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...