சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

Date:

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு புத்தசாசன , மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பல தசாப்தங்களாக, இலங்கை பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வழபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டு தோறும் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்களை ஈர்க்கிறது.

அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தை அடுத்து , இலங்கை அரசாங்கம் சபரிமலை யாத்திரையை முறையாக அங்கீகரித்து அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...