சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

Date:

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு புத்தசாசன , மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பல தசாப்தங்களாக, இலங்கை பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வழபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டு தோறும் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்களை ஈர்க்கிறது.

அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தை அடுத்து , இலங்கை அரசாங்கம் சபரிமலை யாத்திரையை முறையாக அங்கீகரித்து அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...