சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

Date:

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (19) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் திட்டங்களை திறம்பட செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதன் மூலம் கிராமங்களுக்கு பணம் சீராகச் செல்வதோடு கிராமப்புற பொருளாதாரம் வேகமாக வளர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட திட்டங்களை முறையாகவும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்துவதும், இந்த நன்மைகளை மக்களுக்கு வழங்குவதும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் குறித்து அதிக கவனம் செலுத்தவும், அவர்கள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்படுவதைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக எதிர்வரும் வரவு வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...