சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

Date:

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படுவதாக பேராதனை வைத்தியசாலை நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார்.

முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும். சிக்குன்குனியா காய்ச்சலின் பின்னர் ஏற்படும் மூட்டுவலி, 40 சதவீதமானோருக்கு 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கிறது.

மேலும் 20 சதவீதமானோர் 3 மாதங்களுக்கும் மேலாக மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால், கை, கைவிரல், மணிக்கட்டு பகுதியில் வீக்கம் மற்றும் வலி, மற்றும் தளர்வாக நடப்பது போன்ற அறிகுறிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என நிபுணர் ரலபனாவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...