தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

Date:

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் (National Cyber Security Operations Centre) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையம், இலங்கை கணணி அவசரப் பதிலளிப்பு நிறுவனம்  மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத் திட்டத்தின் மூலம் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அனுமதியின்றிய நுழைவுகளை அடையாளங் காண முடியும் எனவும், அரச நிறுவனங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவைகள், தனிப்பட்ட தரவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...