தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

Date:

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் (National Cyber Security Operations Centre) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையம், இலங்கை கணணி அவசரப் பதிலளிப்பு நிறுவனம்  மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத் திட்டத்தின் மூலம் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அனுமதியின்றிய நுழைவுகளை அடையாளங் காண முடியும் எனவும், அரச நிறுவனங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவைகள், தனிப்பட்ட தரவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...