தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

Date:

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று (18) பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...