தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

Date:

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று (18) பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

More like this
Related

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த...

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள்...

இன்று முதல் ஆசனப்பட்டி அணியாவிட்டால் அபராதம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால்...