பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் நீர்நிலைகள் நிரம்பி அவ்வப்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.