தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள் மகள் சாம் குறித்து எழுதிய உணர்ச்சி பூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட தியாகி அனஸ் ஷரீபின் மனைவி சின்னஞ்சிறு சாம் குறித்து இப்படி எழுதுகிறார்.

மகள் சாம் எப்போதுமே தந்தை அனஸுடனேயே இருப்பாள். செய்தித் தயாரிப்பு நடக்கும் சமயங்களிலும் கூட தன் தந்தையை அங்குமிங்கும் தேடுவாள்.

ரேடியோவில் தந்தையின் குரல் வரும் போது அப்போது தான் முதற் தடவையாக கேட்பது போன்று கேட்பாள்.

தனது தந்தையின் மரணத்தின் பின் அவரின் பணியை சாம் நிறைவேற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவரின் அடிச்சுவட்டை தொடரும் குரலாக சாம் மாறுவாள் ”

அனஸ் சரீப், காசாவில்  இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது தியாகம், பலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் சின்னமாக திகழ்கிறது.

அவரின் மரணம், காசாவில் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் தியாகத்தின் சின்னமாக உலகளவில் நினைவுகூரப்படுகிறது.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...