தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை மையமாக வைத்து நடைபெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதியமைச்சர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (11) நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் உள்வாங்கி தேசிய மீலாத் விழா போட்டிகள் நடாத்தப்பட்டு வருவதோடு பதிவுசெய்யப்பட்ட 18 பள்ளிவாயல்கள் அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டு பத்து மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு நூலாக தொகுக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள புராதன இடமான தர்ம கபீர் பள்ளிவாயலின் புகைப்படம் நினைவு முத்திரையாக வெளியிடப்படவுள்ளது.

இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் அம்பலாந்தோட்டை மெலே கொலணி போலானை கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல் அரூஸியா பள்ளிவாயல் மைதானத்தில் சமய கலை கலாச்சார அம்சங்களுடன் நடைபெறவுள்ளதோடு இவைகளின் ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

இதில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், மாவட்ட செயலாளர், மாவட்ட மேலதிக உதவிச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம். எஸ்.எம். நவாஸ், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர்ஆமித், அதிகாரிகள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...