இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளி: ஏறாவூரில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூரும் 35வது ஸுஹதாக்கள் தினம்!

Date:

 ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

 தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 121 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனங்களில் ஆறாத காயமாகவும் இருந்து வருகிறது. புலிகளின் இந்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அரசியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அதேநேரம் “அல்லாஹ் அந்த ஷுஹதாக்களை பொருந்திக் கொள்ளட்டும்; அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்” என கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...