வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

Date:

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுய போக்குவரத்திற்கான சாரதி அனுமதி பத்திரங்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகைதரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் வாடகை வாகனங்களை கொள்வனவு செய்து, அவர்கள் சுற்றுலா செல்வதாகவும்
இதற்காக பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரம் மாத்திரமே வழங்கப்படும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் வாகன போக்குவரத்து திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...