வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

Date:

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுய போக்குவரத்திற்கான சாரதி அனுமதி பத்திரங்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகைதரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் வாடகை வாகனங்களை கொள்வனவு செய்து, அவர்கள் சுற்றுலா செல்வதாகவும்
இதற்காக பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரம் மாத்திரமே வழங்கப்படும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் வாகன போக்குவரத்து திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...