60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

Date:

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம்.

பலஸ்தீன தரப்பு போர் நிறுத்த திட்ட நிபந்தனைகள் பின்வருவன அடங்கும்:

1. உயிருள்ள 10 கைதிகள் மற்றும் 18 உடல்களை விடுவித்தல்.

2. மனிதாபிமான அமைப்புகள், ரெட் கிரசண்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் காசாவிற்கு உதவி வழங்குதல்.

3. 60 நாள் போர் நிறுத்தம்.

4. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

5. ஷுஜாயியா மற்றும் பெய்ட் லாஹியா சுற்றுப்புறங்களைத் தவிர்த்து வடக்கு மற்றும் கிழக்கு காசா பகுதியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்கு இஸ்ரேலிய படைகள் பின்வாங்கப்படும்.

6. உயிருள்ள 10 கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 140 பாலஸ்தீன கைதிகளையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அனுபவிக்கும் 60 கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஒவ்வொரு உடலுக்கும், 10 பாலஸ்தீன உடல்கள் ஒப்படைக்கப்படும்.

8. அனைத்து பாலஸ்தீன மைனர் மற்றும் பெண் கைதிகளின் விடுதலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...