60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

Date:

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம்.

பலஸ்தீன தரப்பு போர் நிறுத்த திட்ட நிபந்தனைகள் பின்வருவன அடங்கும்:

1. உயிருள்ள 10 கைதிகள் மற்றும் 18 உடல்களை விடுவித்தல்.

2. மனிதாபிமான அமைப்புகள், ரெட் கிரசண்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் காசாவிற்கு உதவி வழங்குதல்.

3. 60 நாள் போர் நிறுத்தம்.

4. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

5. ஷுஜாயியா மற்றும் பெய்ட் லாஹியா சுற்றுப்புறங்களைத் தவிர்த்து வடக்கு மற்றும் கிழக்கு காசா பகுதியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்கு இஸ்ரேலிய படைகள் பின்வாங்கப்படும்.

6. உயிருள்ள 10 கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 140 பாலஸ்தீன கைதிகளையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அனுபவிக்கும் 60 கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஒவ்வொரு உடலுக்கும், 10 பாலஸ்தீன உடல்கள் ஒப்படைக்கப்படும்.

8. அனைத்து பாலஸ்தீன மைனர் மற்றும் பெண் கைதிகளின் விடுதலை.

Popular

More like this
Related

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த...

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்கள்  வாயிலாக இஸ்ரேல் வேலைவாய்ப்பு குறித்து பரப்பப்படும் போலியான தகவல்கள்...

இன்று முதல் ஆசனப்பட்டி அணியாவிட்டால் அபராதம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால்...