அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

Date:

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்  இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அவரை கைது செய்ய நுகேகொடை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

முன்னதாக எங்கள் மக்கள் சக்தி (அபே ஜனபலவேகய) கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்துரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக...

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர...

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...