சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

Date:

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு புத்தசாசன , மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பல தசாப்தங்களாக, இலங்கை பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வழபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டு தோறும் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்களை ஈர்க்கிறது.

அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தை அடுத்து , இலங்கை அரசாங்கம் சபரிமலை யாத்திரையை முறையாக அங்கீகரித்து அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும்.

Popular

More like this
Related

நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு...

வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்

இன்றையதினம் (27) நாட்டின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்...

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த...

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக...