சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

Date:

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு புத்தசாசன , மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பல தசாப்தங்களாக, இலங்கை பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வழபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டு தோறும் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்களை ஈர்க்கிறது.

அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தை அடுத்து , இலங்கை அரசாங்கம் சபரிமலை யாத்திரையை முறையாக அங்கீகரித்து அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...