அருகம்பேயை சூழ உள்ள மக்களின் சமாதானத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பங்கம் இல்லா வகையில் உல்லாசப் பயணிகளின் வருகை இடம்பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வாஸித் எம்பி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் நேற்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திஸானாயக்க அவர்களை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதியினால் அருகம்பே பிரதேசத்திற்கு வருகைதரக் கூடிய சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், இஸ்ரேல்  சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும் வினவப்பட்ட கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதிலளித்திருந்தார்.

அவர் பதிலளிக்கையில், இஸ்ரேல்  உல்லாச பயனிகளின் வணக்கஸ்தலமான சபாத் பற்றியும், அவர்கள் சுற்றுலா பயணிகளிலாக வந்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பதையும் மற்றும் அவர்களுக்கு மக்களினுடைய எதிர்ப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் சமாதானத்திற்கு, கலாச்சாரத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் உல்லாச பயணிகளுடைய வருகை இடம்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமின்றி, பொத்துவிலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களை நேரில் சந்திப்பதற்கான திகதியொன்றினையும் பாராளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளதுடன் மிக விரைவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டினை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...