மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

Date:

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று (06) காலை 11.45 மணியளவில் வீடமைக்க தளம் வெட்டி கொண்டிருந்த வேளையில் திடீரென மண் மேடு சரிந்ததால் 6 பேர் புதையுண்டனர்.

சம்பவத்தையடுத்து மஸ்கெலியா பிரதேச சபை பணியாளர்களுடன் பிரதேசவாசிகள் புதையுண்ட 6 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சரிந்த மண் மேடு அகற்றப்பட்டு 6 பேரும் அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் யதுர்ஷன் (28), யோகேஸ்வரன் (45), ராஜேஸ்வரன் (38), விஜயலிங்கம் (45), விஜயகுமார் (43), ஆறுமுகம் (45) ஆகிய 6 பேரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர்.

மஸ்கெலியா பொலிஸார், ராணி தோட்ட தொழிலாளர்கள் இணைந்து இவர்களது உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபை முதல்வர், சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...