வெள்ளவத்தை பள்ளிவாசலில் 106 பேரின் ரகசிய வாக்கெடுப்பில் உலமா சபை தலைவர் நாளை தெரிவு

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமை மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு நாளை சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

உலமா சபையின் மத்திய குழு அங்கத்தவர்கள் 106 பேரும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

தெரிவாகும் 30 பேர்களில் இருந்து நிர்வாகத்துக்கான 11 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மூன்று வருட கால ஆயுளைக் கொண்ட சபையில் தலைவர் 3 தடவை மட்டுமே பதவியில் இருக்கும் விதமாக உலமா சபையின் யாப்பு திருத்தப்பட்டுள்ள நிலையிலேயே இம்முறைய தெரிவு நடைபெறுகின்றது.

64 வயதான அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த 21 வருடங்களாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவராக இருந்து வருகிறார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...