இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்,

இதன் ஆரம்பக் கூட்டம் இன்று செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் CR 04 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இச்சங்கத்தில் சேர விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைக்கும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...