பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

Date:

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது மாணவர் முகமது சுஹைல், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 15  அவர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முஹம்மது சுஹைலின் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, விசாரணைகளில் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தனது கட்சிக்காரரை விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, முஹம்மது சுஹைலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...

GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம்

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay...