2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்

Date:

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில் பல்வகை போக்குவரத்து மையங்கள் கட்டமைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

கொழும்பு உட்பட மேலும் பல பேருந்து நிலையங்களை மேம்படுத்துவதே அமைச்சின் நோக்கம் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ‘க்ளின் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ் ரூ. 425 மில்லியன் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 08 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...