புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

Date:

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு, அடுத்த வாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு நேற்று பிற்பகல் அமைச்சில் ஒன்றுகூடியபோது குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை தெரிவித்தார்.

புதிய வரைவில் மீதமுள்ள சிக்கலான பகுதிகளில் அடையாளம் காணும் பணிகள் இந்த வாரத்தில் முடிக்கப்படும் எனவும், அதற்காக குழு தினமும் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, குழுவினால் செய்யப்படும் மாற்றங்களை இணைத்து சட்ட வரைஞர் திணைக்களம் சட்டமூலத்தை உருவாக்கும் என்று குழு தலைவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11)...

நேபாள இடைக்கால தலைவராக சுசிலா கார்கி

நேபாளத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு...

இலங்கை- நேபாளம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து...

எதிர்க் கட்சிகளின் குழப்பத்தால் 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனால் தொடங்கிய...