புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த பேருந்து நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கு 424 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலைய புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விசேட அம்சங்களுடனான நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக...

குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ...

அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok

சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம்,...