புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில் நபிகளாரின் போதனைகள் ஊழலற்ற நீதியான ஆட்சி பற்றிய உத்வேகத்தையும் தருகின்றன: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Date:

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முகம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும்.

குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் பற்றிய அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவையாகும்.

அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதியும் ஊழலும் நிறைந்த அமைப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே அவர்களின் செய்தி அமைந்திருந்தது.

மேலும், அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சுரண்டாத, அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான உன்னதமான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு நாடாக நாம் புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில், ஊழலும் ஏற்றத்தாழ்வும் அற்ற நீதியான ஆட்சி பற்றிய அந்தப் போதனைகள் நமக்கு மிகுந்த வலிமையையும் உத்வேகத்தையும் தருகின்றன.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பை நான் மிகுந்த மதிப்புடன் நினைவுகூர்கிறேன்.

இந்த உன்னதமான போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கப்பெறும், மனிதநேயமும் செழிப்பும் மிக்கதோர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மீலாதுன்-நபி தினமாக அமையட்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...