புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில் நபிகளாரின் போதனைகள் ஊழலற்ற நீதியான ஆட்சி பற்றிய உத்வேகத்தையும் தருகின்றன: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Date:

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முகம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும்.

குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான இரக்கம் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறல் பற்றிய அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவையாகும்.

அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதியும் ஊழலும் நிறைந்த அமைப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே அவர்களின் செய்தி அமைந்திருந்தது.

மேலும், அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சுரண்டாத, அனைவரும் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கான உன்னதமான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு நாடாக நாம் புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில், ஊழலும் ஏற்றத்தாழ்வும் அற்ற நீதியான ஆட்சி பற்றிய அந்தப் போதனைகள் நமக்கு மிகுந்த வலிமையையும் உத்வேகத்தையும் தருகின்றன.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் சமூகம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பை நான் மிகுந்த மதிப்புடன் நினைவுகூர்கிறேன்.

இந்த உன்னதமான போதனைகளை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கப்பெறும், மனிதநேயமும் செழிப்பும் மிக்கதோர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மீலாதுன்-நபி தினமாக அமையட்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...