அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

Date:

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தரவுகளை உட்சேர்ப்பதற்குத் தேவையான அரச சேவைகளை வழங்குவதற்காக சமகாலத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அணுகுமுறைகளால், பிரஜைகளுக்கு குறிப்பிடத்தக்களவு சிரமங்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமையும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்திற்கமைய, பிரஜைகளுக்கு தனியான கணணி செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் ‘அரசாங்க சுப்பர் அப்’ செயலியை (Government SuperApp) அபிவிருத்தி செய்வது மூலோபாய முன்னுரிமையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...