இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

Date:

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையிலான வாராந்திர விமான சேவைகளைத் தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆர்கியா ஏர்லைன்ஸ் விமானம் IZ 639 இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 6.30க்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும்.

இது புதன்கிழமை காலை 6.15க்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓமான் மற்றும் மாலைத்தீவுகள் வழியாக இஸ்ரேலிய விமானங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமான சேவை கொழும்பை வந்தடைய சுமார் 9 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IZ 640 விமானம் புதன்கிழமை இரவு 10:30க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை 05:35க்கு டெல் அவிவ் வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கியமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இந்த விமானம் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...