இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

Date:

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச பொருளாதாரத்தை தற்போது பாதிக்கும் நிலைமைகள் மற்றும் இடையூறுகள், தெற்காசியாவில் அவற்றின் தாக்கங்கள் குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

கலந்துரையாடலின் போது, ​​இந்த உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் சீதாராமனால் ஆற்றப்படும் தலைமைப் பங்கிற்கு மொரகொட தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் சாதகமாக பங்களிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு சென்ற இஷாரா செவ்வந்தி

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்...

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கைக்கு எதிராக துருக்கி, பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்: அர்தூகான்

இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலைக் கொள்கையை விரிவுபடுத்த விரும்புவதாகவும், அதற்கு எதிராக...