எல்ல பஸ் விபத்து: காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

Date:

எல்ல பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய பதுளை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு மருந்துக் குறைப்பாடு குறித்துச் செய்தியளித்ததற்காகவே இந்த விசாரணை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்ல விபத்தில் காயமடைந்தவர்ளுக்கு சிகிச்சையளிக்கும் போது தானும் காயமடைந்ததாகவும் அதனால் இன்று நன்றாக சட்டை கூட அணிய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், தனக்கு ஒழுக்காற்று விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, எல்ல விபத்தில் காயமடைந்த சிறுமி ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் மொத்தம் 17 பேர் காயமடைந்து அவர்களில் பலர் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும் நால்வர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...