எல்ல பஸ் விபத்து: காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

Date:

எல்ல பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றிய பதுளை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் ஊடகங்களுக்கு மருந்துக் குறைப்பாடு குறித்துச் செய்தியளித்ததற்காகவே இந்த விசாரணை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்ல விபத்தில் காயமடைந்தவர்ளுக்கு சிகிச்சையளிக்கும் போது தானும் காயமடைந்ததாகவும் அதனால் இன்று நன்றாக சட்டை கூட அணிய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், தனக்கு ஒழுக்காற்று விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, எல்ல விபத்தில் காயமடைந்த சிறுமி ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் மொத்தம் 17 பேர் காயமடைந்து அவர்களில் பலர் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும் நால்வர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

23 நிமிடங்கள் கைதட்டலால் அதிர்ந்த அரங்கம்: விருது வென்ற ஆவணப்படம் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’

இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின்...

சவூதி துறைமுக அதிகார சபைத் தலைவருடன், அமைச்சர் பிமல் சந்திப்பு:முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு!

2 ஆவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், அமைச்சர் பிமல் ரத்னாயக்க,...

ஜெனீவாவிற்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று...

உலகம் முழுவதிலும் தென்பட்ட ‘Blood Moon’ புகைப்படங்கள்!

இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது....