சவூதி துறைமுக அதிகார சபைத் தலைவருடன், அமைச்சர் பிமல் சந்திப்பு:முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு!

Date:

2 ஆவது நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில், அமைச்சர் பிமல் ரத்னாயக்க, சவூதி துறைமுக ஆணையத்தின் தலைவரை சந்தித்தார்.

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், சவூதி துறைமுக ஆணையத்தின் (MAWANI) தலைவர் Eng  சுலைமான் பின் காலித் அல்-மஸ்ருவா அவர்களை, இன்று ஜித்தாவில் நடைபெற்ற 2 ஆம் நிலையான கடல்சார் தொழில் மாநாட்டில் (Sustainable Maritime Industry Conference) சந்தித்தார்கள்.

இம்மாநாடு சவுதி அரேபியாவினால் 2025, செப்டம்பர் 3 – 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.

இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான கடல்சார் மற்றும் துறைமுக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறிப்பாக, இரு நாடுகளின் முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான மூலோபாய கூட்டிணைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் ரத்நாயக்க அவர்கள், இலங்கையில் நிலவி வரும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக்காட்டினார்கள்.

தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் கப்பல் போக்குவரத்து வழிகளில் கடல்சார் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அவர், இலங்கையின் துறைமுக மற்றும் கடல்சார் துறைகளில் சவூதி முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு மற்றும் பங்குடமை வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

இரு தரப்பினரும் கடற்படைப் பணியாளர் பயிற்சி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்ததுடன், சர்வதேச கடல் அமைப்பு (IMO) உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் விடயத்தில் உடன்பட்டனர்.

அமைச்சருடன், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், ஜித்தாவில் பணிபுரியும், பதில் கன்சுல் ஜெனரல் மபூசா லாஃபிர், மேலதிக செயலாளர் தர்ஷிகா அனோஜனி மற்றும் அமைச்சர் அவர்களின் அந்தரங்க செயலாளர், அசங்க சந்த்ரசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சவூதி தரப்பிலிருந்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் MAWANI நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...