செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

Date:

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை ”சிறுவர் தின தேசிய வாரம்” பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட அதிகமான நாடுகள் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி “உலக சிறுவர் தினம்” கொண்டாடப்படுகின்றது.

இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பாக இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 01ஆம் திகதி வரை பிரதான தேசிய வைபவம் உள்ளிட்ட செயற்பாட்டுத்திட்டம் “சிறுவர் தின தேசிய வாரம் – 2025” எனப் பிரகடனப்படுத்துவதற்கும், அதன்கீழ் கீழ்க்காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...