ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு

Date:

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு  நாளை செப்டம்பர் 5 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள போலான கிராமத்தின் மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்  பி.ப. 02.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், மற்றும் ஏனைய அதிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் உலமாக்கள் மற்றும் மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...