ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு

Date:

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு  நாளை செப்டம்பர் 5 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள போலான கிராமத்தின் மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்  பி.ப. 02.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், மற்றும் ஏனைய அதிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் உலமாக்கள் மற்றும் மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...