நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை

Date:

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அமைச்சர், இந்த ஒழுங்குமுறை 06 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றார்.

அதன்படி, 100 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்கள் மற்றும் எல்லை தாண்டிய பயணங்கள் மேற்கொள்வதற்கு முன் வாகன ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

இதன்போது, டயர்கள், கண்ணாடிகள் மற்றும் பிரேக்குகளின் நிலை போன்றவை ஆய்வு செய்யப்படும்.

மாகாணங்களைக் கடக்கும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்களும் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வை நடத்தி தேவையான சான்றிதழைப் பெற வேண்டும்.

இதுவே புதிய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாகனங்களில் சுற்றுலாக்களில் ஈடுபடும் பொதுமக்கள், பயணத்திற்கு முன்னர் வாகனம் தேவையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது போக்குவரத்தில் பாதுகாப்பை தேவையான விதிமுறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...