புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த பேருந்து நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கு 424 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலைய புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விசேட அம்சங்களுடனான நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...